புதுதில்லி: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மாலை 4 மணியளவில் வெளியிடப்படுகிறது.
சிபிஎஸ்இ
என அழைக்கப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும்
பள்ளிகளில் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 5-ஆம் தேதி
தொடங்கி ஏப்ரல் 4-ஆம் தேதி முடிவடைந்தது. நாடு முழுவதும், 16 லட்சத்து 88
ஆயிரத்து 144 மாணவ, மாணவியர்கள் இந்த தேர்வை எழுதினர். இந்த தேர்வின்
முடிவுகள் நாளை மாலை 4 மணியளவில் வெளியிடப்படுகின்றன.
தேர்வு முடிவுகளை cbse.nic.in, cbse.examresults.net, cbseresults.nic.in, results.nic.in என்ற
இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டு
அமைச்சகத்தின் செயலர் அனில் ஸ்வரூப் தனது டுவிட்டர் பதிவில்
தெரிவித்துள்ளார்.