ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்து வந்த போராட்டத்தின் நூறாவது நாளான கடந்த செவ்வாயன்று துவங்கி போராட்டக்காரர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். படுகாயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த ஆலோசனையின் முடிவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென்ற அந்நகர் மக்களின் உணர்வுகளுக்கும் கருத்துகளுக்கும் மதிப்பளித்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக் குழுவினர் நேரில் அளித்த கோரிக்கையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படியே தற்பொழுது இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.