அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆங்கிலம் பேச பயிற்சி: செங்கோட்டையன்

ஈரோடு: அரசுப்பள்ளி மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் பேசுவதற்காக வெளிநாட்டு கல்வியாளர்கள் கல்வியாளர்கள் வரவழைக்கப்பட்டு பயிற்சியளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் இன்று பல்வேறு நலத்திட்ட பணிகளை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கிவைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த ஆண்டு 9ஆம் வகுப்பு படிக்கும் 60 ஆயிரம் மாணவர்களுக்கு இலண்டன், ஜெர்மன் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து கல்வியாளர்கள் வரவழைக்கப்பட்டு தனியார் பள்ளிகளுக்கு இணையாக 6 மாதகால ஆங்கில பயிற்சி அளிக்கப்படும் என்றார்.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களும் இந்த பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.