சென்னை: அரசு ஊழியர்
போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர் தியாகராஜன் கைது செய்யப்பட்டு பள்ளி
ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென உயிரிழந்துள்ளார். இச்
சம்பவம் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர்
மாவட்டம் பாபநாசம் அரசுப் பள்ளியில் சிறப்பு ஆசிரியரான தியாகராஜன் இன்று
சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொணடார். அப்போது போராட்டத்தில்
கலந்துகொண்டவர்களை போலீஸார் கைது செய்து எழும்பூரில் உள்ள ஒரு பள்ளியில்
தங்க வைத்தனர்.
இந்நிலையில், கைது செய்து பள்ளியில் தங்க வைக்கப்படிருந்த ஆசிரியர் தியாகராஜன் திடீரென உயிரிழந்தார்.
உயிரிழந்த ஆசிரயர் தியாகராஜன் பார்வை அற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.