தமிழகத்தில், 98 ஆயிரம் பேர், 2017 - 18ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை, தாக்கல் செய்துள்ளனர்.
நிர்ணயிக்கப்பட்ட வருமான உச்ச வரம்பை மீறும், மாத ஊதியதாரர்கள், ஓய்வூதியதாரர்கள் அனைவரும், ஆண்டு தோறும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது அவசியம். 2016 - 17ல், தமிழகத்தில், 45 லட்சம் பேர் கணக்கு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், 2017 - 18ம் ஆண்டுக்கான வரித்தாக்கல், ஏப்., 1ல் துவங்கியது. ஜூலை, 31 வரை, அபராதம் இன்றி, வரித்தாக்கல் செய்ய முடியும். ஆக., 1 முதல், 2019 மார்ச், 31 வரை, அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யலாம்.
நாடு முழுவதும், ஏப்., 1 முதல் இதுவரை, 4.27 லட்சம் பேர், வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் மட்டும், 98 ஆயிரம் பேர் வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில், அதிகமானோர் வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.
நிர்ணயிக்கப்பட்ட வருமான உச்ச வரம்பை மீறும், மாத ஊதியதாரர்கள், ஓய்வூதியதாரர்கள் அனைவரும், ஆண்டு தோறும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது அவசியம். 2016 - 17ல், தமிழகத்தில், 45 லட்சம் பேர் கணக்கு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், 2017 - 18ம் ஆண்டுக்கான வரித்தாக்கல், ஏப்., 1ல் துவங்கியது. ஜூலை, 31 வரை, அபராதம் இன்றி, வரித்தாக்கல் செய்ய முடியும். ஆக., 1 முதல், 2019 மார்ச், 31 வரை, அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யலாம்.
நாடு முழுவதும், ஏப்., 1 முதல் இதுவரை, 4.27 லட்சம் பேர், வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் மட்டும், 98 ஆயிரம் பேர் வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில், அதிகமானோர் வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.