98,000 பேர் வரி கணக்கு தாக்கல்

தமிழகத்தில், 98 ஆயிரம் பேர், 2017 - 18ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை, தாக்கல் செய்துள்ளனர்.


நிர்ணயிக்கப்பட்ட வருமான உச்ச வரம்பை மீறும், மாத ஊதியதாரர்கள், ஓய்வூதியதாரர்கள் அனைவரும், ஆண்டு தோறும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது அவசியம். 2016 - 17ல், தமிழகத்தில், 45 லட்சம் பேர் கணக்கு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், 2017 - 18ம் ஆண்டுக்கான வரித்தாக்கல், ஏப்., 1ல் துவங்கியது. ஜூலை, 31 வரை, அபராதம் இன்றி, வரித்தாக்கல் செய்ய முடியும். ஆக., 1 முதல், 2019 மார்ச், 31 வரை, அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யலாம்.

நாடு முழுவதும், ஏப்., 1 முதல் இதுவரை, 4.27 லட்சம் பேர், வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் மட்டும், 98 ஆயிரம் பேர் வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில், அதிகமானோர் வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.