இன்ஜி., கவுன்சிலிங்: ஜூன் 2 வரை அவகாசம்

சென்னை, அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கான, 'ஆன்லைன்' விண்ணப்பப் பதிவுக்கான அவகாசம், ஜூன், 2 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.அண்ணா
பல்கலை நடத்தும், இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க, 'ஆன்லைன்' விண்ணப்பப் பதிவு, மே, 3ல், துவங்கியது.நேற்று மாலை வரை, 1.15 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், ஆன்லைன் பதிவுக்கான அவகாசம், ஜூன், 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, தமிழ்நாடு மாணவர் சேர்க்கை கமிட்டி செயலர், ரைமண்ட் உத்தரியராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி மாவட்டங்களில், இணையதள சேவை துண்டிக்கப்பட்டதால், இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜூன், 2 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. அனைத்து மாவட்ட மாணவர்களும், இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.