பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டன.
பிளஸ்
1 பொதுத் தேர்வு மார்ச் 7 -ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16 -ஆம் தேதி
முடிவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் பள்ளி மாணவ-மாணவிகள்,
தனித்தேர்வர்கள் என 8 லட்சத்து 63 ஆயிரம் பேர் தேர்வெழுதியுள்ளனர்.
ஏற்கெனவே
அறிவிக்கப்பட்டபடி, பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு
வெளியிடப்பட்டன. இதில் மொத்தம் 91.3 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி
அடைந்துள்ளனர்.
அதில் மாணவிகளின்
தேர்ச்சி விகிதம் 94.6 சதவீதமாகவும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 87.4
சதவீதமாகவும் உள்ளன. வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் 7.2 சதவீதம்
கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்கள்
தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in,
www.dge2.tn.nic.in ஆகிய அரசு தேர்வுத் துறையின் இணையதளங்களிலும் தேர்வு
முடிவுகளை மதிப்பெண் விவரங்களுடன் அறிந்து கொள்ளலாம்.
தோல்வி அடைந்தாலும்: கடந்த 2017 -ஆம் ஆண்டு வரை பிளஸ் 1 தேர்வு, பள்ளி அளவிலான ஆண்டுத் தேர்வாகவே நடத்தப்பட்டது.
இந்த ஆண்டிலிருந்துதான் முதல்முறையாக பொதுத் தேர்வாக நடத்தப்படுகிறது.
தேர்வு
முடிவு வெளியான பிறகு அனைவருக்கும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
வழங்கப்படும். இத்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களும் பிளஸ் 2 வகுப்புக்கு
செல்லலாம். தேர்ச்சிபெறாத பாடங்களை சிறப்பு துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி
பெற்றுவிடலாம்.
அடுத்த ஆண்டு பிளஸ் 2
தேர்வை முடிக்கும்போது, இரு பொதுத்தேர்வுகளின் (பிளஸ் 1, பிளஸ் 2)
மதிப்பெண்கள் அடங்கிய தொகுப்பு மதிப்பெண் பட்டியல் அவர்களுக்கு
வழங்கப்படும்.