அண்ணா பல்கலை இன்ஜி., கவுன்சிலிங் பதிவு : மே முதல் வாரம் துவக்கம்

அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு, மே முதல் வாரத் தில், 'ஆன்லைன்' பதிவுகள் துவங்க உள்ளன. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பு களில் சேர, தமிழக அரசு சார்பில், அண்ணா பல்கலையின் ஒற்றை சாளர கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. 


இந்த கவுன்சிலிங், இந்த ஆண்டு முதல், ஆன்லைன் கவுன்சிலிங்காக மாற்றப்பட்டுள்ளது. கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கு, மே முதல் வாரத்தில், ஆன்லைன் பதிவு துவங்க உள்ளது. இதற்கான அறிவிப்பு, இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என, அண்ணா பல்கலை கவுன்சிலிங் குழுவினர் தெரிவித்தனர். ஆன்லைன் கவுன்சிலிங்கில், தொழிற்கல்வி மாணவர்கள், மாற்று திறனாளிகள் மற்றும் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு, சென்னை யில் நேரடியாக கவுன்சிலிங் நடத்த, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த விபரங்கள் எல்லாம், அதிகாரபூர்வ அறிவிப்பில் வெளியாகும்.