வயதிற்கேற்ப ஓய்வூதியம் மற்றும் பனிக்காலத்திற்கேற்ப பணிக்கொடை பலன் விதிகளில் திருத்தம்

ஓய்வூதியம் பெறுவோரின் வயதுக்கேற்ப, ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க, விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.இதன்படி, 80 முதல், 84 வயதிற்கு உட்பட்டோருக்கு, அடிப்படை ஓய்வூதியத்தில், 20 சதவீதம்; 85 முதல், 89 வயது வரை உள்ளோருக்கு, 30 சதவீதம்; 90 முதல், 94 வயது வரை உள்ளோருக்கு, 40 சதவீதம் உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதே போல், 95 முதல், 99 வயது வரை உள்ளவர்களுக்கு, 50 சதவீதம்; 100 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, 100 சதவீதம், உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


அதேபோல், அரசு பணியிலிருக்கும் போது இறந்தவர்களுக்கு வழங்கப்படும், பணிக்கொடை பலன் விதிகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதன்படி, பணியில் சேர்ந்த ஓராண்டுக்குள் இறந்தால், இரண்டு மடங்கு மாத சம்பளம்; ஓராண்டுக்கு மேல், ஐந்தாண்டுக்குள் இறந்தால், ஆறு மடங்கு மாத சம்பளம் வழங்க வேண்டும் என, திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.அதே போல், ஐந்தாண்டு முதல், 11 ஆண்டுக்குள் இறந்தால், 15 மடங்கு மாத சம்பளம்; 20 ஆண்டுக்கு மேல் இறந்தால், அதிகபட்சமாக, 33 மடங்கு மாத சம்பளம் வழங்க வேண்டும் என, திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.  மற்றும் பனிக்காலத்திற்கேற்ப