உங்கள் குழந்தைக்கு மருத்துவ கல்வி அமையுமா ஜோதிட விளக்கம்

ஒருவர்  ஜாதகத்தில்   9 , 10  , 11  ல் கேது   அமையப்பெற்றால்  மருத்துவக்கராகனாகிய   சந்திரன்  உச்சம்  பெற்று   அமையப்பெற்றால்  மருத்துவக்கல்வி  அமைகிறது  .

சூரியன்   +  செவ்வாய்    இணைந்து   காணப்பட்டாலும்   , பரிவர்த்தனை  பெற்றாலும்  மருத்துவக் கல்வி அமையும் .
9  மிடம்   நன்றாக  இருக்க வேண்டும் .   குருவுக்கு   கேந்திரத்தில்  செவ்வாய்  அமைந்தால்     குரு   மங்கள யோகம்   ஏற்படும்  .
  வழக்கறிஞர்    படிப்புக்கு   வாக்கு ஸ்தானத்தில்   குரு  , புதன் ,  பலம் பெற்று   காணப்பட  வேண்டும் .
அதோடு    2 , 10 க்கு   அதிபதிகள்  பரிவர்த்தனை   பெற்றால்  பெரும்   6  மிடம்   பலம் பெற்று     , 6  க்கு  அதிபதியும்   பலம்  பெற்றால்  தான்  வக்கீல்  தொழில்   உண்டாகும் .
மற்றும்    1_2   , 2  _ 9  , 2  _    11  ஆகியோர்   பரிவர்த்தனை   அடைய வேண்டும் .

 கலெக்டர்  படிப்பு   படிக்கப்    2 . 11  ஆகிய  ஸ்தான்ங்களில்   செவ்வாய்  , சனி  ஆட்சி  பெற்றுக்  காணப்பட்டால்     தேர்வில்   வெற்றி  பெற்று  யோகம்   பெறுவார் .
    செவ்வாய்  பலம்  பெற்றவர்கள்  அறுவை  சிகிச்சை  செய்யும்    டாக்டர்களாக   விளங்குவார்கள்  .   சூரியன்    சாரத்தில்    செவ்வாய்   நின்றாலும்   செவ்வாய்  சாரத்தில்   சூரியன்   நின்றாலும்   டாக்டர்   தொழிலில்   சாதனை   செய்வார்கள் .
    ஒருவருக்கு   கல்வி  தடைப்பட்டாலும்   2 , 4 , 5   க்கு  அதிபதிகள்   திசை   நடைபெறும்   போது   தடைபட்ட   கல்வியை  மீண்டும்   தொடரும்   நிலை  ஏற்படும் .
  கோச்சாரம்  கெடும் போதும்   7  ½   சனி அஷ்டமசனி   நடைபெ றும்  போது   நன்றாக   படிக்கும்   மாணவர்கள்   கல்வியில்   குறைந்த   மதிப்பெண்   பெற்று    தோல்வி   அடையும்   நிலை  ஏற்படும் .
 புதன்  நின்ற   வீட்டிற்கு   அதிபதி   புதனுக்கு  1 . 4 , 7 , 10   போன்ற  கேந்திரங்களில்   இருந்தால்   உயர்ந்த   படிப்பு   , பட்டப் படிப்பு   ஏற்படுகிறது  .
மற்றும்    2  மிடத்தில்    சனி  , ராகு    போன்ற   கிரகங்கள்   அமைந்தால்   கல்விக்கு   தடை  ஏற்படும் .