ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்

ஆசிரியர்கள், உண்ணாவிரதம், போராட்டம், செங்கோட்டையன்சென்னை: சம வேளைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, 4 நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.


பள்ளி கல்வி செயலருடன் அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இடைநிலை ஆசிரியர்கள், போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.