வேலுார் மாவட்டத்தில் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு நோட்டீஸ்

வேலுார் மாவட்டத்தில், அனுமதி பெறாமல் இயங்கும், 18 சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.கடந்த, 2014க்கு முன் துவக்கப்பட்ட, சி.பி.எஸ்.இ., பள்ளிகள், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திடம் இருந்து, அனுமதி பெற்று, இயங்குகின்றன. மாநில அரசின் அங்கீகாரத்தை, பள்ளிகள் பெற, கடந்த மாதம், தமிழக அரசு உத்தரவிட்டது. 


இது குறித்து, வேலுார் மாவட்ட சி.இ.ஓ., மார்ஸ் கூறியதாவது:வேலுார் மாவட்டத்தில், மொத்தம், 42 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உள்ளன. இவற்றில், 18 பள்ளி கள், மாநில அரசின் அங்கீகாரமின்றி இயங்குகின்றன. மாநில அரசின் அங்கீகாரத்தை, மூன்று மாதத்திற்குள் பெறாவிட்டால், பள்ளிகளை மூட, நடவடிக்கை எடுக்கப் படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.