அரசு அறிவிக்கும் கோடைவிடுமுறை தேதியை அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் - செங்கோட்டையன்

அரசு அறிவிக்கும் கோடை விடுமுறை தேதியை தனியார் பள்ளிகளும் கடைபிடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசு எந்தவிதமான தேர்வுகளை கொண்டுவந்தாலும் அதை எதிர்கொள்ள பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளதாக கூறினார்.