தேர்வு நேரத்தில் போட்டிகளை நடத்தும் விளையாட்டுத்துறை

ராமநாதபுரம்,: பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளும், மற்ற வகுப்புகளுக்குஆண்டுத் தேர்வும் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்டங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதனால், மாணவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


ராமநாதபுரத்தில் கடந்த வாரம் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடந்தது. ஆண்டு இறுதி கணக்கு முடிக்கும் பணி காரணமாக 30க்கும் குறைவானரே பங்கேற்றனர்.மார்ச் 26ல் நடந்த மாதாந்திர விளையாட்டுப் போட்டியில் தேர்வு காரணமாக மாணவர்கள் பங்கேற்கவில்லை.இந்த நிலையில், 'கேலோ இந்தியா' மாநில விளையாட்டுப் போட்டிக்கான மாவட்ட மகளிர் அணி தேர்வுப் போட்டிகள் நேற்று நடந்தது. இதில் 30க்கும் குறைவான மகளிரே பங்கேற்றனர்.