கேள்வித்தாள் லீக்; டில்லி மாணவர்கள் போராட்டம்

சி.பி.எஸ்.இ., கேள்வி தாள் லீக்கிற்கு கண்டனம் தெரிவித்து டில்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக சி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12 ம் வகுப்பு கேள்வி தாள் லீக் ஆனது. 


இது தொடர்பாக காங்., தலைவர் ராகுல் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று காலை டில்லியில் உள்ள சி.பி.எஸ்.இ., நிர்வாக தலைமை அலுவலகம் நோக்கி காங்., மாணவர் அமைப்பினர் பேரணியாக சென்றனர். தொடர்ந்து அங்கு ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் பெற்றோர்களும் பங்கேற்றுள்ளனர். 

வாட்ஸ் அப் மூலம் சிலர் கேள்வி தாளை பகிர்ந்து கொண்டதாக 10 க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் லீக் ஆன தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் புதிதாக தேர்வு நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இது தொடர்பாக அரசு தரப்பில் எவ்வித விளக்கமும் இல்லை.