412 நீட் தேர்வு பயிற்சி மையங்கள் திறப்பு: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் 412 நீட் தேர்வு பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
தமிழகத்தில் தற்போது 412 நீட் தேர்வு பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 70 ஆயிரத்து 419 மாணவர்கள் நீர் தேர்வு பயிற்சி பெறுகின்றனர். அரசு பொதுத் தேர்வு முடிந்ததும், 8 கல்லூரிகளில் நீர் தேர்வுக்கான முழு பயிற்சி அளிக்கப்படும்.
புதிய பாடத்திட்டங்கள் ஏப்ரல் இறுதிக்குள் புத்தக வடிவம் பெறும். விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும். விடைத்தாள் திருத்த கூடுதல் கட்டணம் கேட்டு ஆசிரியர்கள் போராட்டம் என்பது கவனத்திற்கு வரவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.