புதுதில்லி:
சி.பி.எஸ்.இ 10ம் மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் இந்தியா
முழுவதும் சமீபத்தில் நடைபெற்று முடிந்தன. இந்நிலையில் சில கேள்வி தாள்கள்
இணைய தளங்களில் வெளியானதாக குற்றச்சாட்டின் அடிப்படையில் சி.பி.எஸ்.இ. 12ம்
வகுப்பு பொருளாதார பாடத்துக்கு மறுதேர்வு நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ
அறிவித்துள்ளது.
இதேபோல்
சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு கணிதப்பாடத்துக்கு மறுதேர்வு நடத்தப்படும் என
சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்தது. தேர்வு நடைபெறும் நாள் விரைவில்
அறிவிக்கப்படும் என சி.பி.எஸ்.இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.