10ம் வகுப்பு தேர்வு இன்று துவக்கம் - பள்ளிக் கல்வி அமைச்சர்செங்கோட்டையன், வாழ்த்து

பத்தாம் வகுப்பு தேர்வு இன்று துவங்குகிறது. இதில், 10 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தமிழகம், புதுச்சேரியில், 3,609 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.தேர்வில் முறைகேடு நடக்காமல் கண்காணிக்க, 6,900 பேர், பறக்கும் படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வில் பங்கேற்கும், மாணவ - மாணவியருக்கு, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன், வாழ்த்து தெரிவித்துள்ளார்.