போலீஸ் தேர்வு: இன்று முதல் ஹால் டிக்கெட்

தமிழக காவல் துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு, 6,140 இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்ய, 2017, டிச., 12ல், தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு, 3.26 லட்சம் பேர், விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கான எழுத்து தேர்வு, அடுத்த மாதம், மாவட்டம் தோறும் நடக்க உள்ளது. இத்தேர்வில் பங்கேற்க, இன்று மதியம் முதல், தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து, 'ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, வாரியம் அறிவித்துள்ளது.