இணையதள குளறுபடியால், உதவி பொறியாளர்
தேர்வுக்கு பலர் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், இன்றுடன் முடியும்
அவகாசத்தை, நீட்டிக்க வேண்டிய கட்டாயம், மின் வாரியத்திற்கு
ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு மின் வாரியம், எலக்ட்ரிக்கல் பிரிவில், 300;
சிவில் பிரிவில், 25 என, 325 உதவி பொறியாளர் பணியிடங்களை, எழுத்துத் தேர்வு
வாயிலாக நிரப்ப உள்ளது.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு, பிப்., 14ல் வெளியானது. தேர்வுக்கு, மின் வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள்.ஆனால், தேர்வு அறிவிப்பு வெளியானதில் இருந்து, மின் வாரிய இணையதளத்தின் வேகம் குறைவாகவே இருந் தது. அதனால், விண்ணப்பிக்க முடியாமல், பட்டதாரிகள் அவதிப்பட்டனர்.
விண்ணப்பித்த பலருக்கும், பணம் செலுத்துவதிலும் பிரச்னை ஏற்பட்டு உள்ளது.இது குறித்து, பாதிக்கப்பட்டவர்கள், மின் வாரிய அதிகாரிகளுக்கு, நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் புகார் தெரிவித்து உள்ளனர். அதனால், விண்ணப்பிப்பதற்கு இன்றுடன் முடியும் அவகாசத்தை, நீட்டிக்க வேண்டிய கட்டாயம், மின் வாரியத்திற்கு ஏற்பட்டுள்ளது.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு, பிப்., 14ல் வெளியானது. தேர்வுக்கு, மின் வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள்.ஆனால், தேர்வு அறிவிப்பு வெளியானதில் இருந்து, மின் வாரிய இணையதளத்தின் வேகம் குறைவாகவே இருந் தது. அதனால், விண்ணப்பிக்க முடியாமல், பட்டதாரிகள் அவதிப்பட்டனர்.
விண்ணப்பித்த பலருக்கும், பணம் செலுத்துவதிலும் பிரச்னை ஏற்பட்டு உள்ளது.இது குறித்து, பாதிக்கப்பட்டவர்கள், மின் வாரிய அதிகாரிகளுக்கு, நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் புகார் தெரிவித்து உள்ளனர். அதனால், விண்ணப்பிப்பதற்கு இன்றுடன் முடியும் அவகாசத்தை, நீட்டிக்க வேண்டிய கட்டாயம், மின் வாரியத்திற்கு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர்
கூறுகையில், 'மின் வாரிய உயரதிகாரிகளின் ஒப்புதல் கிடைத்ததும், காலக்கெடுவை
நீட்டிப்பது குறித்து முடிவு செய்யப்படும்' என்றார்.