பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.999
என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன்படி, ஓராண்டுக்கு அளவில்லா டேட்டா
சேவையும், 181 நாட்களுக்கு அளவில்லா அழைப்புகளையும்
மேற்கொள்ள முடியும்.
தனியார் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்கும் வகையில், அரசு துறையைச் சேர்ந்த பிஎஸ்என்எல் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.அந்த வகையில், பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.999 என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.
இதன்படி, ஓராண்டுக்கு அளவில்லா டேட்டா சேவையும், 181 நாட்களுக்கு அளவில்லா உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளையும் (லோக்கல், எஸ்டிடி) மேற்கொள்ள முடியும். 181 நாட்கள் முடிந்தபிறகு ஒவ்வொரு வாய்ஸ் கால் அழைப்புகளுக்கும் நிமிடத்துக்கு 60 பைசா கட்டணமாக வசூலிக்கப்படும.பிஎஸ்என்எல் நிறுவனம் அண்மையில் ரூ.1,099 என்ற திட்டத்தை அறிவித்தது. இதில், 84 நாட்களுக்கு அளவில்லா டேட்டா சேவையும், அளவில்லா அழைப்புகளையும் மேற்கொள்ள முடியும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.