பிப்., 21 முதல் தொடர் மறியல் : ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ ஜியோ'வின் ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம், சென்னையில் நடந்தது. இதில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி, வரும், 21ம் தேதி முதல், சென்னையில் தொடர் மறியல் போராட்டம் நடத்துவது என, முடிவு செய்யப்பட்டு உள்ளது.


கடந்த, 2016 ஜனவரி முதல், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, நிலுவைத்தொகை வழங்க வேண்டும்.கல்லுாரி பேராசிரியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட, கோரிக்கைகளை வலியுறுத்தியும், போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.