JACTTO-GEO போராட்டம் ரூ.18,000 கோடியை PFRDA-விடம் செலுத்தக் கோரி அல்ல! மாநில நிதிச்சுமை குறைய CPS-ஐ முற்றாய் நீக்க வேண்டியே! - திண்டுக்கல் எங்கெல்ஸ்

மாண்புமிகு நீதியரசர்களே! மதிப்புமிகு அமைச்சர்களே! பொது மக்களே!*
☀JACTTO-GEO CPS-ல் பிடித்த பங்குத் தொகை ரூ.18,000 கோடியை PFRDA-விடம் செலுத்தக்கோரி போராடவில்லை.
☀அரசிற்கும், ஊழியர்களுக்கும் ஒருசேர பாதிப்பை ஏற்படுத்தும் *CPS திட்டத்தையே முற்றாய் நீக்கிவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே JACTTO-GEO-வின் கோரிக்கை.*
_CPS-ஆல் ஊழியருக்குப் பாதிப்பா? அரசிற்கு பாதிப்பா?_ என்றால் இரண்டிற்கும் ஒரே பதில்,
*ஆம்!* என்பதே.
_பழைய ஓய்வூதிய திட்டத்தின்படி அரசு தனது பங்காக எவ்விதத் தொகையும் செலுத்த வேண்டிய அவசியமில்லை._
ஆனால், *CPS திட்டத்தில் பணியேற்கும் ஊழியருக்கான 10% தொகையை ஊழியர் பணியேற்ற மாதம் முதல் ஓய்வு பெறும் மாதம் வரை அரசு செலுத்தியாக வேண்டும்.*
☀இப்படியாக 2003-ல் இருந்து கடந்த 2017 மார்ச் மாதம் வரை CPS திட்டத்திற்காகத் தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர் & ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த தொகை ரூ.9,000 கோடி.
☀இதற்கு ஈடாக தமிழக அரசு செலுத்திய பங்கு ஈடுத் தொகை ரூ.9,000 கோடி.
☀அரசு & அரசு ஊழியர்களின் CPS பங்குத் தொகைகளின் கூடுதலான இந்த ரூ.18,000 கோடியை இன்னும் ஏன் PFRDA-விடம் செலுத்த வில்லை எனக் கேட்டுப் போராடவில்லை.
மாறாக,
CPS திட்டத்தால் அரசு தரப்பு செலுத்த வேண்டிய கட்டாயப் பங்குத் தொகையால் ஏற்பட்டுள்ள நிதிச்சுமையிலிருந்து அரசு விடுபட,
*CPS-ஐ முற்றிலுமாக நீக்கிவிட்டு, எங்களின் ரூ.9,000 கோடியை வருங்கால வைப்பு நிதியில் சேர்த்து கொண்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை எங்களுக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே JACTTO-GEO-வின் 4 அம்சக் கோரிக்கைகளுள் ஒன்று.*
☀TET, TRB, TNPSC போன்ற போட்டித் தேர்வுகளால் அரசுப் பணியேற்கும் நபர்களின் சராசரி பணிக்காலம் என்பது 35 ஆண்டுகள்.
☀அதே நபர்கள் பணி ஓய்வு பெற்ற பின்னான ஆயுட்காலம் என்பது சராசரியாக 10 - 15 ஆண்டுகளே.
CPS திட்ட நடைமுறையில் ஊழியருக்காக *35 ஆண்டுகளும் மாதாமாதம் அரசு பெரும் தொகையை வழங்க வேண்டிய கட்டாயம்* உள்ளது.
ஆனால், *பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியரின் ஓய்வுக்காலத்திற்குப் பின்னான 10 - 15 ஆண்டுகள் நிதி* ஒதுக்கினாலே போதுமானது.
☀இவ்வாறு ஒதுக்கும் நிதியானது 7 ஊதியக்குழுக்களை கடந்துள்ள நிலையிலும் ஒட்டுமொத்த செலவினத்தில் 14% மட்டுமே ஆகும்.
மேலும்,
☀NHIS உள்ளிட்ட திட்டங்களில் திருமணத்திற்குப் பின் ஊழியர்களின் பெற்றோர்கள், அதன் பயன்களைத் துய்க்க இயலாத அனாதைகளாக அரசே கொள்கை வகுத்துள்ளது.
இந்நிலையில் CPS-ல் இருந்து ஓய்வுபெறும் ஒரு நபருக்கு,
*❌குடும்பநலநிதி*
*❌மருத்துவக் காப்பீடு*
*❌பணிக்கொடை*
*❌மாதாந்திர ஓய்வூதியம்*
*உள்ளிட்ட எதுவுமே இல்லாத சூழலில்* அவரிடமிருந்து பிடித்த தொகையிலும் *100%-தையும் திரும்பப் பெறும் உத்தரவாதம் ஏதுமற்ற பங்குச்சந்தையில் முதலீடு* செய்வது என்பது,
*இந்நாட்டில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் அதன்பின் உயிருடன் வாழத் தகுதியற்றோர் என்ற நிலையே ஏற்பட்டுள்ளது.*
☀இவ்வாறாக, அரசிற்கு நிதிச்சுமையையும் அரசு ஊழியர்களுக்கு வாழ்நாள் நெருக்கடியையும் தந்து கொண்டிருக்கும்,
☀CPS திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட்டுவிட்டு,
☀மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் தேர்தல் கால & சட்டசபை அறிவிப்பின்படி,
☀அரசின் நிதிச்சுமையை மேலும் அதிகரிக்கும்படியாகத் தொடர்ந்து காலம் கடத்தாது
*அரசையும் அரசு ஊழியரையும் காக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்திட வேண்டியே JACTTO-GEO போராடி வருகிறது.*