'இ - சேவை' மையத்தில் வாக்காளர் அட்டை

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, ராஜேஷ் லக்கானி கூறியதாவது:
தமிழகம் முழுவதும், இறுதி வாக்காளர் பட்டியல், ஜன., 10ல் வெளியிடப்பட்டது. அதில், புதிதாக, 5.88 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். 
அவர்கள், தங்கள் புகைப்படத்துடன் கூடிய, வாக்காளர் அடையாள அட்டையை, அருகில் உள்ள, இ - சேவை மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.



இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்டு உள்ளது. முதன்முறையாக புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு, இ - சேவை மையங்களில் இலவசமாக வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். 
திருத்தம், முகவரி மாற்றம் செய்தவர்கள், உரிய கட்டணம் செலுத்தி, வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.