தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு அண்ணா நூலகத்தில் பயிற்சி

தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, திறன் உயர்வு பயிற்சி, நாளை சென்னையில் நடக்கிறது.


அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, மத்திய அரசின் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. குறிப்பாக, பிளஸ் 1, பிளஸ் 2 பாடம் எடுக்கும், முதுநிலை ஆசிரியர்களுக்கும், தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கேற்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.


இதன்படி நாளை, அரசுப்பள்ளி மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, சென்னை, அண்ணா நுாற்றாண்டு நுாலக அரங்கில், சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் பயிற்சியை துவக்கி வைக்கிறார்.