தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், பேருந்து நிலையங்கள், ரயில்வே நிலையங்கள் உள்ளிட்ட 43,051 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது.
இந்த முகாமில் 5 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கு ஏற்கெனவே எத்தனைமுறை சொட்டு மருந்து புகட்டியிருந்தாலும் மீண்டும் வழங்கப்பட உள்ளது. சுகாதாரம், மருத்துவம், வருவாய், சத்துணவு, கல்வி, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் பல்வேறு அரசு, அரசு சாரா துறைகளை சேர்ந்த 5443-க்கும் மேற்பட்ட மேற்பட்ட பணியாளர்கள் போலியோ சொட்டு மருந்து முகாமில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மார்ச் 11-ம் தேதி 2-ம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது.