பொங்கல் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை-நெல்லை இடையே சிறப்பு ரெயில்

பொங்கல் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை-நெல்லை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இது 
குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


* சென்னை எழும்பூர்-நெல்லை சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்:06001), 5 மற்றும் 19-ந்தேதி சென்னையில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.50 மணிக்கு நெல்லை சென்றடையும். இதேபோல் நெல்லை-எழும்பூர் சிறப்பு கட்டண ரெயில்(06002), 7-ந்தேதி மதியம் 3 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 3.30 மணிக்கு சென்னை வந்தடையும்.

* எழும்பூர்-நெல்லை சிறப்பு கட்டண ரெயில்(06003), 16-ந்தேதி இரவு 9.50 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 10.50 மணிக்கு நெல்லை சென்றடையும்.

* எழும்பூர்-நெல்லை சுவிதா சிறப்பு ரெயில்(82605), 11 மற்றும் 13-ந்தேதி இரவு 9.50 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 10.50 மணிக்கு நெல்லை சென்றடையும். நெல்லை- எழும்பூர் சுவிதா சிறப்பு ரெயில்(82606), 16-ந்தேதி மாலை 6.25 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5.35 மணிக்கு சென்னை வந்தடையும்.

* எழும்பூர்-நெல்லை சுவிதா சிறப்பு ரெயில்(82601), 12-ந்தேதி இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.50 மணிக்கு நெல்லை சென்றடையும். நெல்லை-எழும்பூர் சுவிதா சிறப்பு ரெயில்(82602), 28-ந்தேதி மதியம் 3 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை வந்தடையும்.

* எழும்பூர்-நெல்லை சுவிதா சிறப்பு ரெயில்(82603), 25-ந்தேதி இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.50 மணிக்கு நெல்லை சென்றடையும். நெல்லை-எழும்பூர் சுவிதா சிறப்பு ரெயில்(82604), 15 மற்றும் 17-ந்தேதி மாலை 6.25 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5.35 மணிக்கு சென்னை வந்தடையும்.

* நெல்லை-எழும்பூர் சுவிதா சிறப்பு ரெயில்(06004), 12-ந்தேதி மதியம் 1.30 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை வந்தடையும்.