பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும்: தமிழக அரசு

சென்னை:தமிழகத்தில் நாளை பொது விடுமுறை கிடையாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பள்ளி, கல்லுாரி, பல்கலைகழகங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும். எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு நாளை விடுமுறை
என சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களுக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2017-ம்ஆண்டு ஜனவரி 17-ம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி விடுமுறை விடப்பட்டதால் அதனை வைத்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டதால் இன்று அதனை தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.