இந்திய ராணுவ அகாடமிகளில் 415 அதிகாரி வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு

இந்திய ராணுவ அகாடமிகளில் காலியாக உள்ள 415 பயிற்சியுடன் கூடிய அதிகாரி
பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு பிளஸ்-2 முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள் விவரம்:
1. National Defence Academy (Indian Army) - 208
2. National Defence Academy (Indian Navy) - 60
3. National Defence Academy (Indian Air Force) - 92
4. Naval Academy (10 2 Cadet Entry Scheme) - 55
ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணிகளுக்கான தேர்வு(1)-2018 (என்.டி.ஏ. -1-2018 தேர்வு) மூலம் இந்த பணிகளுக்கு தகுதியானவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
வயது வரம்பு: 02.07.1999 மற்றும் 01.7.2002 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: இயற்பியல், கணிதம் பாடங்கள் அடங்கிய பிரிவில் பிளஸ்-2 முடித்திருக்க வேண்டும். அதாவது 10 2 முறையில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உளவியல் திறன் தேர்வு, நுண்ணறிவுத்திறன் தேர்வு, ஆளுமைத் திறன் தேர்வு மற்றும் எஸ்.எஸ்.பி. நேர்முகத் தேர்விண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
உடல்தகுதி: குறைந்தபட்சம் 152 செ.மீட்டர் உயரமும், அதற்கேற்ற எடையளவும் பெற்றிருக்க வேண்டும். பார்வைத்திறன் கண்ணாடியின்றி 6/6, 6/9 என்ற அளவிலும், கண்ணாடியுடன் 6/6, 6/6 என்ற அளவில் பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100.

மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். முதல்கட்ட (பார்ட்-1) விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு கட்டணம் செலுத்திவிட்டு இரண்டாம் கட்ட (பார்ட்-2) விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.02.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsconline.nic.in அல்லது http://www.upsc.gov.in/sites/default/files/Notice_NDAI_2018_Engl.pdf என்ற லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளவும்.