வரும் 18-ஆம் தேதி கூடுகிறது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுமானத்துறையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவதில் தில்லி, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் தீவிரமாக உள்ளன. அண்மையில் நிதியமைச்சக அதிகாரிகளுக்கும் கட்டுமானத் துறையினருக்கும் இடையே நடைபெற்ற கூட்டத்தின் போது கட்டுமானத்துறையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாளை மறுநாள் நடைபெற உள்ள ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கட்டுமானத் துறையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவது குறித்து தீவிரமான விவாதம் இருக்கும் என்று கூறப்படுகிறது.