செய்முறை தேர்வு : சி.பி.எஸ்.இ., அறிவிப்பு

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2வுக்கு செய்முறை தேர்வு, ஜன., 16 முதல் துவங்குகிறது. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 2009க்கு பின், முதல் முறையாக, 10ம் வகுப்புக்கு பொது தேர்வு நடத்தப்படுகிறது. 


நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள், மார்ச்சில் துவங்கி, ஏப்ரலில் முடியும். இந்நிலையில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு, அறிவியல் செய்முறை தேர்வுகளை நடத்த, பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., வாரியம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதன்படி, ஜன., 16ல் செய்முறை தேர்வு துவங்கி, 25ல் முடிகிறது.