ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 16

* விற்பூட்டுப்பொருள் கோளை பூட்டுவிற் பொருள்கோள் எனவும் கூறுவர்.
* ஊஞ்சல் கயிறு போல முன்னும் பின்னுமாகப் பொருள் கொள்வது தாப்பிசை பொருள்கோள் ஆகும்.

* தாப்பிசை என்பதும் தாம்பு இசை எனப் பிரியும். (தாம்பு ஊஞ்சல் கயிறு)
* செய்யுளின் ஈற்றபியைப் பாடலின் பாடலின் முதலில் கொண்டு பொருள் கொள்ளுதல் அளைமறிபாப்புப் பொருள்கோள் ஆகும். (அளை-புற்று, பாப்பு-பாம்பு)
* செய்யுளின் முதலில் அமைந்துள்ள சொல்லும், இறுதியில் அமைந்துள்ள சொல்லும் பொருள்படப் பொருத்துவது - பூட்டுவிற் பொருள்கோள் ஆகும்.
* பல அடிகளிலும் உள்ள சொற்களை மாற்றிப் பொருள் கொள்வது கொண்டு கூட்டுப் பொருள்கோள் ஆகும்.
* செய்யுள் அடிகளை முன் பின்னாக மாற்றினாலும் பொருளும் ஓசையும் சிதையாமல் வருவது அடிமறிமாற்றுப் பொருள்கோள்.
* உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் என்பதற்கு சான்று பந்து ஆட்டம் (பந்தாட்டம்)
* டகர, ரகரக் குற்றியலுகரப் புணர்ச்சிக்குச் சான்று காடு கோழி, ஆறு பாலம்
* மொழி மூவகைப்படும். ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருவது தனி மொழி
* தொடர் மொழிக்கு சான்று படம் பார்த்தான்.
* தனி மொழிக்கும், தொடர் மொழிக்கும் பொதுவாய் அமைவது பொதுமொழி
* வினைமுற்று(முற்றுவினை) இரு வகைப்படும்.
* "செய்பவன் கருவி நிலம் செயல் காலம்
செய்பவன் ஆறும் தருவது வினையே" - இதில் "வினையே" என்பது தெரிநிலை வினைமுற்றை உணர்த்தும்.
* வினைமுற்றின் விகுதி குறைந்து நிற்கும் சொல் எச்சம். எச்சம் இரு வகைப்படும்.
* ஓர் எச்சவினை பெயரைக் கொண்டு முடிந்தால் அது பெயரெச்சம் எனப்படும்.
* பெயரெச்சம் கால வகையில் மூன்று வகைப்படும்.
* பெயரெச்ச வாய்ப்பாடுகள் செய்த, செய்கின்ற, செய்யும்.
* முக்காலத்தையும் செயலையும் வெளிப்படையாகக் காட்டும் பெயரெச்சம், தெரிநிலைப் பெயரெச்சம்(வந்த பையன்)
* பண்பினை மட்டும் உணர்த்தி பெயர்ச்சொல்லைக் கொண்டு முடியும் எச்சம் குறிப்புப் பெயரெச்சம்(நல்ல பையன்)
* ஓச்ச எச்சவினை, வினையைக் கொண்டு முடிந்தால் அது வினையெச்சம் எனப்படும் (படித்து வந்தான்)
* வினையெச்சம் இருவகைப்படும். காலவகையால் மூவகை.
* மடித்து வந்தான் - இறந்தகால வினையெச்சம்
* படித்து வருகிறான் - நிகழ்கால வினையெச்சம்
* படித்து வருவான் - எதிர்கால வினையெச்சம்
* காலத்தையும், செயலையும் உணர்த்தி வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்சவினை தெரிநிலை வினையெச்சம்(படித்துத் தேறினான்)
* காலத்தை வெளிப்படையாக உணர்த்தாமல் பண்பினை உணர்த்தி நின்று வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்சம் குறிப்பு வினையெச்சம்(மெல்ல பேசினான்)
* ஒரு வினைமுற்றுச் சொல் எச்சப்பொருளில் வந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம்.
* ஒரு பொதுச்சொல் முன்பின் சேர்ந்து வரும் சொல்லின் குறிப்பால் ஒரு பாலை நீக்கி மற்றொரு பாலைச் சுட்டுவது ஒன்றொழி பொதுச்சொல் என்பது பெயர். (வீட்டின் முன் ஐவர் கோலமிட்டனர்)
* ஒரு சொல் தன் பொருளையும் குறித்துத் தனக்கு இனமான பொருளையும் குறித்து வருவது இனங்குறித்தல் எனப்படும். (வெற்றிலை தின்றாள்)
* ஒரு சொல் இரண்டு, மூன்று, நான்குமுறை அடுக்கி வருவது அடுக்குத்தொடர் எனப்படும்.
* இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்தியைசா நன்னூல்
* இசை, குறிப்பு, பண்பு பற்றி வருவது இரட்டைக்கிளவி
* விரைவு, அச்சம், வெகுளி, மகிழ்ச்சி பற்றி வருவது அடுக்குத் தொடர்.
* இளவழகன் வந்தான் இது வெளிப்படை தொடர்.
* மாடு என்னும் சொல் அஃறினைப் பொதுப்பெயர் ஆகும்.
* மாடு கன்றை ஈன்றது இத்தொடரில் மாடு என்பது பசுவைக் குறிக்கும். மாடு பால் கறந்தது என்பது குறிப்புச் சொல்.
* வினா ஆறு வகைப்படும்.
* திருக்குறளை இயற்றியவர் யார்? என ஆசிரியர் கேட்பது அறிவினா
* நன்னூலை இயற்றியவர் யார்? மாணவர் ஆசிரியரைக் கேட்பது அறியாவினா
* பாம்போ? கயிறோ? - ஐயவினா
* பருப்பு உள்ளதா? என வணிகர்களிடம் கேட்பது கொளல்வினா
* மாணவர்களே! உங்களுக்குச் சீருடை இல்லையோ? - கொடைவினா
* முருகா சாப்பிட்டாயா? - ஏவல்வினா
* வினாவிற்கு ஏற்பட விடையளிப்பதுதான் மொழி நடையின் சிறப்பு
* விடை எட்டு வகைப்படும்.(இறை, செப்பு, பதில் என்பன விடையின் வேறு பெயர்கள்)
* இது செய்வாயா? எனில் செய்யேன் எனபது மறைவிடை
* இது செய்வாயா? எனில் செய்வேன் என்பது நேர்விடை
* இது செய்வாயா? எனில் நீயே செய் என்பது ஏவல்விடை
* இது செல்வாயா? எனில் செய்யாமல் இருப்பேனோ என்பது வினாஎதிர் வினாதல் விடை
* இது செய்வாயா? எனில் உடம்பு நொந்தது என்பது உற்றுதுரைத்தல்
* இது செய்வாயா? எனில் கை வலிக்கும் என்பது உறுவது கூறல் விடை
* ஆடுவாயா? எனில் பாடுவேன் என்பது இனமொழி விடை
* ஒரு பொருள் குறித்து வரும் சொற்களையே ஒருபொருட் பன்மொழி
* ஒரு பொருட் பன்மொழிக்கு சான்று நடுமையம்
* தேன் போன்ற மொழி என்பது விரியுவமை. தேன்மொழி - தொகை உவமை
* ஒரு பொருள்ளை அதனை விடச் சிறந்த மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது உவமை எனப்படும்.
* உவமானத்தையும், உவமேயத்தையும் வேறுப்படுத்தாது. இரண்டும் ஒன்றே என்பது உருவகம்.
* வடக்கு என்னும் திசை பெயரோடு பிற திசைகள் வந்து சேரும்போது நிலைமொழி ஆறும் மெய்யும் நீங்கும்.
* மேற்கு நாடு என்பது மேனாடு எனச் சேரும்.
* கருமை குழி என்பது ஈறுபோதல், இனமிகல் எனும் விதிகளின்படி புணரும்.
* அடிஅகரம் ஐ ஆதல் - பைங்கூழ்
* ஆதி நீடல் - மூதூர்
* இனமிகல் கரும்பலகை, தன்னொற்றிரட்டல் வெற்றிலை
* மரம் அடி என்பது மரவடி எனச் சேரும்.
* வட்டக்கல் என்பது மகர ஈற்றுப் புணர்ச்சி
* பொருள் என்பது ஒழுக்கமுறை பொருள் இலக்கணம் இரு வகைப்படும்.
* அன்புடைய தலைவன், தலைவி பற்றிய ஒழுக்கத்தினை கூறுவது அகத்தினை எனப்படும். அகத்தினை ஏழு வகைப்படும்.
* அகப்பொருளுக்குரிய பொருள்கள் மூன்று
* நிலமும் பொழுதும் முதற்பொருள் எனப்படும்.
* அகம், புறம் ஆகிய இரண்டும் பொருள் இலக்கணம்.
தொடரும்...
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!