அரசு துறைத் தேர்வுகள்: 23-இல் தொடக்கம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் டிசம்பர் 23 முதல் 31-ஆம் தேதி வரை அரசு துறைத் தேர்வுகள் நடைபெற உள்ளன. இதுகுறித்து
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கை: மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத் திட்டத்தின்படி, அரசு துறைத் தேர்வுகள் நடைபெற உள்ளன.

கொள்குறி தேர்வு முறை, விரிவாக விடை எழுதும் முறை மற்றும் கொள்குறியுடன் விரிவாக விடை எழுதும் முறை என மூன்று வகைகளில் மொத்தம் 147 தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்தத் தேர்வில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட OMR தாள் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கான விதிமுறைகள், கால அட்டவணை, நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் ஆகிய விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது