அஷ்டம சனி,ஜென்ம சனி,கண்டக சனி என்ன செய்யும்..? சனிபெயர்ச்சி பலன்கள் 2017-2020
வணக்கம் இன்று 19.12.2017 வாக்கிய பஞ்சாங்கப்படி காலை 9.58 க்கு சனி விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார்..
சனிப்பெயர்ச்சி எந்தெந்த ராசியினருக்கு பாதிப்பாக இருக்கிறது என பார்த்தால்
ரிசபம் ராசியினருக்கு அஷ்டம சனி ,மிதுனம் ராசியினருக்கு கண்டக சனி,கன்னி
ராசியினருக்கு அர்த்தாஷ்டம சனி,விருச்சிக ராசியினருக்கு பாத சனி,தனுசு
ராசியினருக்கு ஜென்ம சனி ,மகரம் ராசியினருக்கு ஏழரை சனி ஆரம்பம் ஆகிறது..
துலாம் ராசியினருக்கு ஏழரை சனி முடிகிறது மேசம் ராசியினருக்கு அஷ்டம சனி
முடிகிறது சிம்மம் ராசியினருக்கு அர்த்தாஷ்டம சனி முடிகிறது..விருச்சிகம்
ராசியினருக்கு ஜென்ம சனி முடிகிறது...கும்பம் ராசியினருக்கு கர்ம சனி
முடிந்து லாப சனி ஆரம்பிக்கிறது...மீனம் ராசியினருக்கு பாக்ய சனி முடிந்து
கர்ம சனி ஆரம்பிக்கிறது கடகம் ராசியினருக்கு ஜெய சனி ஆரம்பம்..சிம்ம
ராசியினருக்கு பஞ்சம சனி ஆரம்பம்
ஜெய சனி ,பஞ்சம சனி ,லாப சனி இவையெல்லாம் நல்ல யோகத்தை தரும் துலாம்
ராசியினருக்கு சனி மூன்றாம் ராசிக்கு செல்வதால் அது இனி நல்ல யோக பலன்களை
கொடுக்கும்
அஷ்டம சனி என்பது தந்தைக்கு விரய ஸ்தானம் தந்தை வழியில் கர்ம காரியங்கள்
மருத்துவ செலவினம் சமூகத்தில் மதிப்பு மரியாதையை கெடுத்தல் ,பணம் நஷ்டம்
தொழில் மந்தம் இவற்றை அஷ்டம சனி தரும் சமூகம் என்பது உறவையும் குறிக்கும்
சனி 3 மாதங்களுக்கு முன்பே பலன் கொடுக்க ஆரம்பித்து விடுவார் ...அஷ்டம சனி
என்றால் எல்லோரும் பயப்படக்காரணம் சனி தொழில் காரகன் ..அவர் ராசிக்கு
மறைந்தால் காலில் அடிபடுதல் சனிக்குண்டான தொழிலில் வசியம் இல்லாமல் போதல்
போன்ற பலன்களை கொடுக்கும் என்பதாலும் நம்மை விட தாழ்ந்தவர்களால் அவமானம்
உண்டாக்கும் என்பதால்தான்.
.தொழிலாளி என்பது சனி ..அவர் மறைந்தால் வேலைக்காரர்கள் இல்லாமல் ஒரு
முதலாளி என்ன செய்ய முடியும்..சரி அடிமையாக இருப்போருக்கு ..? அவர்களுக்கு
கையும் காலும் தான் வேலைக்காரன்...கை கால்கள் சோர்ந்து போனால் முதலாளி என்ன
செய்ய முடியும்..கைகால்களில் பிரச்சினை உண்டானால் என்ன செய்ய முடியும்..?
நான் பயமுறுத்துகிறேன் என எண்ண வேண்டாம் எச்சரிக்கையாக நீங்கள் இருக்க
வெண்டும் என்பதற்காக சொல்கிறேன்.உங்கள் ஜாதகப்படி நல்ல திசாபுத்திகள்
நடப்பின் உங்களை பெரிதாக சனி பாதிக்க மாட்டார்..
ஏழரை சனியில் இரண்டாம் சுற்று பொங்கு சனி எனப்படும் இதில் கடுமையாக
உழைத்தால் மட்டும் முன்னேறலாம் இதுதான் பெரும்பாலோனோர்க்கு நடக்கும்
குழந்தையாக இருக்கும்போதே முதல் சுற்று முடிந்திருக்கும்...பொங்கு சனியில்
நீங்கள் அதிகம் உடல் உழைப்பில்லாதவர் என்றால் உங்களை ஒரு வழி செய்யாமல் சனி
போகமாட்டார்...சனிக்கு தேவை கடுமையான உழைப்பு அது இல்லாதவர்களுக்கு அதற்கு
சமமாக அலைச்சலையோ சோதனையோ தராமல் போக மாட்டார்..ஒருத்தன் கேஸ்
போட்டுட்ட்டான் எங்கியோ ஒரு கிராமத்தில் சுகமாக அதுவரை வாழ்ந்தவர்
நகரத்துக்கு வழக்குக்காக அலைந்து அலைந்து ஒரு வழி
ஆகிவிட்டார்..எல்லோருக்கும் இப்படி ஆகும் என சொல்ல முடியாது அவரவர்
சூழ்நிலைக்கு ஏற்றவாரு சனி வேலை வாங்குவார் .எது சொன்னாலும் கேட்கலைன்னா
நான் சுகவாசியாதான் இருப்பேன்னு சொன்னாதான் காலை கையை முடக்கம் செய்கிறார்
கண்டக சனி என்பது மனைவி அல்லது கணவன் வழியில் வரும் மன உளைச்சல்
..கணவனுக்கு அறுவை சிகிச்சை அல்லது மனைவி செய்து வந்த தொழிலில் நஷ்டம்
என்பதால் கணவனுக்கு பன விரயம் ஆகிரதுய் என்றால் அது கண்டக சனியாகும்
அர்த்தாஷ்டம சனி என்பது ராசிக்கு நான்கில் வருவதால் இது தாய்க்கு பாதிப்பு
நான்கு என்பதால் நம் உடல் சுகத்துக்கும்பாதிப்பு சிலர் வெளிநாடும்
வெளிமாநிலமும் வெளியூரும் செல்வர் அப்படி சென்றால் தாய் தந்தைக்கு பாதிப்பு
குறையும் இல்லையேலிருவருக்கும் மாறி மாரி மருத்துவ செலவு பங்காளி வகையில்
இறப்பு,சிலர் வீடு கட்ட கடன் வாங்குவர் ...அல்லது நஷ்டத்துக்கு சொத்தை
விற்பர் ..சிலர் குடும்பத்தில் எதிர்பாராத திருப்பங்கள் பிரச்சினைகள்
உண்டாகும்..இது கன்னி ராசியினருக்கு இப்போது ஆரம்பத்திருக்கிறது ஏற்கனவே
சோதனையில் தானே இருக்கோம் என்றாலும் சனி நகரும் ராசிக்கு ஏற்ற பலனை
கொடுக்கத்தான் செய்வார்
சனிக்கிழமையில் பெருமாள் கோயிலில் நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள் உடல் ஊனமுற்றோர்க்கு உதவி செய்யுங்கள் ...