2000 ரூபாய் திரும்பப்பெறும் எண்ணமில்லை: அருண் ஜேட்லி

புதுதில்லி: கடந்தாண்டு நவம்பர் மாதம் புழக்கத்தில் உள்ள ரூபாய் 500 மற்றும் 1000 நோட்டுக்களை மத்திய அரசு திரும்ப பெற்றது. அதன்பிறகு உயர் மதிப்பு கொண்ட 2000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டுகள்
செல்லாது என்று அறிவிக்கப்பட இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது. இதனால் பல இடங்களில் மக்கள் 2000 ரூபாய் வாங்க தயக்கம் காட்டினர்
இந்நிலையில், மேற்கண்ட தகவல்களை மறுத்து, இது வேறும் வதந்தி எனவும், 2000 ரூபாயை திரும்பப்பெறும் திட்டம் அரசுக்கு ஏதும் இல்லை என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!