தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை,காஞ்சிபுரம்,கல்லூரி,இன்று,விடுமுறைசென்னை: தொடர் மழை காரணமாக பல்வேறு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் இன்று(நவ.,3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


விடுமுறை:

சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் பெய்த தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூர், நாகை, திருவாரூர், காரைக்கால் மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.



தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை:

கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் இன்று(நவ.,3) விடுமுறை அளிக்க வேண்டும் எனவும், விடுமுறை அளிக்காவிட்டால் வீட்டிலிருந்தபடி வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் வருவாய் துறை உத்தரவிடப்பட்டுள்ளது.