பி.எஸ்சி., நர்சிங் 9ல் கவுன்சிலிங்

சென்னை: தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டில் உள்ள, பி.எஸ்.சி., நர்சிங் படிப்பில், 759 இடங்கள் காலியாக உள்ளன. அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங்., - பி.பார்ம்., உட்பட, ஒன்பது துணை மருத்துவ படிப்புகளுக்கு, அரசு ஒதுக்கீட்டிற்கு, 8,381 இடங்கள் உள்ளன. இதற்கு, இரண்டு கட்ட கவுன்சிலிங் நடந்து முடிந்துள்ளது.

இதில், 759 காலி இடங்கள் உள்ளன. இதற்கான, மூன்றாம் கட்ட கவுன்சிலிங், சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனையில், நவ., 9, 10ல், நடக்கும் என, மருத்து கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.