சென்னை: சென்னை: கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,
நாகை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவை மற்றும் காரைக்காலிலும் பள்ளிகளுக்கு நாளை
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 30-ஆம் தேதி தீவிரமடையும் என்று வானிலை
ஆய்வு மையம் அறிவித்தது. மேலும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை
கொண்டுள்ளதால் நாளை முதல் இரு நாள்களுக்கு சென்னை, காஞ்சிபுரம்,
திருவள்ளூர் உள்பட 8 மாவட்டங்களில் மிகவும் கனமழை பெய்யும் வாய்ப்பு
இருப்பதாகவும் அறிவித்தது. இந்நிலையில் 30-ஆம் தேதியான இன்று அதிகாலை முதலே
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பேய் மழை கொட்டி வருகிறது.
Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-schools-holiday-on-tomorrow-collector-replies-300144.html
Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-schools-holiday-on-tomorrow-collector-replies-300144.html