வங்கிகளுக்கு, 4 நாட்கள் தொடர் விடுமுறை

திருப்பூர் : வரும் 29ம் தேதி முதல் தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு மாதம், இரண்டு, நான்காவது சனிக்கிழமை மற்றும் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை, வங்கிகள் விடுமுறை; விடுமுறைக்கு ஏற்ப, பொதுமக்கள், தொழில் துறையினர் தங்கள் வங்கிசார்ந்த பணிகளை முன்னதாகவே மேற்கொள்கின்றனர்.

அந்தவகையில், வரும் 29ல் சரஸ்வதி பூஜை; 30ல் ஆயுத பூஜை, அக்., 1 ஞாயிற்றுக்கிழமை மற்றும் மொகரம் பண்டிகை; 2ம் தேதி காந்தி ஜெயந்தி என, அடுத்தடுத்து பண்டிகை தினம் வருகிறது.அதனால், தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், தொழில் துறையினர், பொதுமக்கள், வங்கி சார்ந்த பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டியது அவசியம்.