பாடத்திட்டம் : கோவையில் இன்று கருத்தாய்வு

புதிய பாடத்திட்டம் குறித்து, ஆசிரியர்களிடம் கருத்து கேட்கும் வகையில், மண்டல கருத்தாய்வு கூட்டம், கோவையில் இன்று நடக்கிறது. அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலையில், கோவை காளப்பட்டி, என்.ஜி.பி., பொறியியல் கல்லுாரியில், மண்டல கருத்தாய்வு கூட்டம், இன்று நடக்கிறது.
திருப்பூர் உள்ளிட்ட, எட்டு மாவட்டங்களில் இருந்து, தலா 25 ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள், தனியார் பள்ளி முதல்வர்கள் பங்கேற்கின்றனர். காலை, 9:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை, கூட்டம் நடக்கிறது.