செப்டம்பர் 1 முதல் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டியது கட்டாயம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: வாகன ஓட்டிகள் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

நகல் ஓட்டுநர் உரிமம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அசல் உரிமத்தை எப்போதும் வாகனத்தில் வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.