மின்துறை ஊழியர்கள் 20 ஆண்டு காலமாகப் போராடி -வாதாடி இன்று ஓய்வூதியத்தை உறுதி செய்துள்ளனர்.
ஆயுள் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் 25 ஆண்டுகாலமாகப் போராடி - வாதாடி பணியிலில்லாகாலத்திற்கும் ஊதியத்தை உறுதி செய்துள்ளனர்.
இவ்விரண்டிலும் மேலான - பலமான - தளர்வில்லாத்
தொடர் போர்க்குணமே நமக்கான ஓய்வூதியத்தைப்பெற வழிவகுக்கும்.
14 ஆண்டுகளாக பலகட்ட போராட்டங்களை உரிமைவேட்கையுள்ள அரசு ஊழியர் & ஆசிரியர் இயக்கங்கள்தனித்தும் இணைந்தும் நடத்தி வந்துள்ளன.
இறுதியாக பிப்ரவரி 2016-ல் நடத்திய வலுவானகாலவரையற்ற வேலைநிறுத்தம் 14 ஆண்டுகால CPSஒழிப்புப் போராட்ட வரலாற்றின் முதல் ஆக்கப்பூர்வஅதிர்வலையை ஆளும் தரப்பில் ஏற்படுத்தி பழையஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கானவல்லுநர் குழுவை அமைக்க வைத்தது. 26.2.2016-ல்அமைக்கப்பட்ட வல்லுநர் குழு 3 முறை காலநீட்டிப்புபெற்றும், 16 மாதங்கள் முடிந்தும் இன்று வரை அரசிடம்அறிக்கை சமர்ப்பிக்கவில்லை.
இந்நிலையில் இக்கோரிக்கைக்காவும் JACTTO-GEOநடத்தி முடித்துள்ள கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டமும்தொடர்ச்சியாக ஆகஸ்ட் 5-ல் நடைபெறவுள்ளசென்னைப் பேரணியும் CPS ஒழிப்பிற்கான அடுத்தஅதிர்வலையை ஆளும் தரப்பிடம் உறுதியாகஏற்படுத்தும்.
இந்த 16 மாத இடைவெளியில் நடைபெற்ற ஒரு சிலவலிமையான போராட்டங்களில் அரசு தரப்பு வல்லுநர்குழு அறிக்கை சமர்ப்பிக்கவில்லை என்றே காரணம்கூறியது. இதே காரணத்தை எதிர்வரும் சென்னைப்பேரணியைத் தொடர்ந்தும் அரசு தரப்பு கூறாமலிருக்கவேண்டுமெனில், வல்லுநர் குழுவிற்கும் அறிக்கைசமர்ப்பிக்க அழுத்தம் கொடுத்தாக வேண்டிய கட்டாயச்சூழலை உணர்ந்த அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும்தன்னெழுச்சியாக வல்லுநர் குழுவினருக்குத் தொடர்மின்னஞ்சல் அனுப்பும் போராட்டத்தைக்கையிலெடுத்துள்ளனர்.
போர்க்களத்தின் பன்முனைத் தாக்குதலை ஒத்த JACTTO-GEO-வின் சென்னைப் பேரணியும், CPS வல்லுநர் குழுஅறிக்கை வேண்டி நாள்தோறும் மின்னஞ்சல் அனுப்பும்தன்னெழுச்சிப் போராட்டமும் ஒருவேளை இறுதிவெற்றியை நமக்குப் பெற்றுத் தராவிட்டாலும், அரசுதரப்பில் ஆக்கப்பூர்வ அடுத்தகட்ட அதிர்வலைக்குவித்திடும் என்பதை உறுதியாக நம்பலாம்.
('அப்டீனா உடனே வெற்றி வராதா?' எனச்சலிப்புறுவோர் மீண்டும் ஒருமுறை முதல் 3 பத்திகளைவாசிக்கவும்)
இனியும் ஆளுக்கொரு சாக்கும், நாளுக்கொருபோக்குமாக இல்லாமல் கனிந்து வந்துள்ள ஒன்றுபட்டபோராட்டக் களச்சூழலை இலக்கு நோக்கி நகர்த்திட
*நாள்தோறும் மின்னஞ்சல் அனுப்பும் CPS தன்னெழுச்சிப்போராட்டத்திலும்,*
*ஆகஸ்ட் 5-ல் நடைபெறவுள்ள JACTTO-GEOவின்சென்னைப் பேரணியிலும்,*
*உரிமை மீட்கும் வேட்கையோடே*
*உடன் இருப்போம் இறுதிவரை!*
*உரிமை வேட்கை உறுதியானால்,*
*உரிமை மீட்பும் இறுதியாகும்!!*