'குரூப் - 4' பதவிக்கு 17ல் கவுன்சிலிங்

'குரூப் - 4 தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான கவுன்சிலிங், வரும், 17ல் துவங்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:


தமிழக அரசு துறைகளில், குரூப் - 4 பதவியில், காலியிடங்களை நிரப்ப, 2016 நவ., 6ல் எழுத்து தேர்வு நடந்தது. இதன் முடிவு, பிப்., 21ல் வெளியானது. இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான, முதல் கட்ட கவுன்சிலிங், ஜூலை, 17 முதல் நடக்கும்.
இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவையாளர் பதவிகளுக்கு, ஜூலை, 17 முதல், ஆக., 8 வரையும், தட்டச்சர் பதவி களுக்கு, ஆகஸ்ட், 16 முதல், 30 வரையிலும், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு, செப்., 4 முதல், 6 வரையிலும் கவுன்சிலிங் நடக்கும். கூடுதல் விபரங்களை, www.tnpsc.gov.in/results.html என்ற இணையதள இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.