ஆகஸ்ட் 31க்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு.

ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
மேலும் உள்ளாட்சித் தேர்தலுக்கான கால அட்டவணையை தயார் செய்யவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திமுக தொடர்ந்த வழக்கு விசாரணை வரும் புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.