பிளஸ் 2 அசல் சான்றிதழ் 10ம் தேதி வினியோகம்

'பிளஸ் 2 மாணவர்களுக்கு, ௧௦ம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக பாடத்திட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, தேர்வு முடிவு மற்றும் மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவு வந்ததும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதை பயன்படுத்தி, மாணவர்கள் கல்லுாரிகளில் சேர்ந்தனர்.

இந்நிலையில், 'பிளஸ் 2 மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், வரும், 10ம் தேதி காலை, 10மணி முதல், பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படும்' என, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி அறிவித்துள்ளார். தனித்தேர்வர்கள், தேர்வு எழுதிய பள்ளிகளில், சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

'பிளஸ் 2 மாணவர்களுக்கு, ௧௦ம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக பாடத்திட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, தேர்வு முடிவு மற்றும் மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவு வந்ததும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

அதை பயன்படுத்தி, மாணவர்கள் கல்லுாரிகளில் சேர்ந்தனர்.இந்நிலையில், 'பிளஸ் 2 மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், வரும், 10ம் தேதி காலை, 10மணி முதல், பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படும்' என, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி அறிவித்துள்ளார். தனித்தேர்வர்கள், தேர்வு எழுதிய பள்ளிகளில், சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.