''பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் நலனுக்காக, ஓரிரு நாளில்
மாதிரி வினாத்தாள் தொகுப்பு வெளியிடப்படும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன்
தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம், கோபி அடுத்த, கொளப்பலுாரில் நேற்று, பள்ளிக்கல்வித் துறை
அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:தமிழக மாணவர்கள், பல்வேறு பொதுத் தேர்வை
சந்திக்கும் வகையில், 450 மையங்களில், வாரந்தோறும், சனிக்கிழமை பயிற்சி
அளிக்கப்படும். எந்த தேர்வாக இருந்தாலும், அதை, மாணவர்கள் எளிதாக
சந்திக்கும் வகையில், 54 ஆயிரம் வினாக்கள் அடங்கிய தொகுப்பு, தமிழ் மற்றும்
ஆங்கிலத்தில், வரைபடங்களுடன் வெளியிடப்படும்.
பிளஸ் 1 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத உள்ளனர். அவர்களுக்கு, இன்னும் ஓரிரு
நாட்களுக்குள், மாதிரி வினாத்தாள் வழங்கப்படும். எப்படி தேர்வை எழுத
வேண்டும் என்பதை, அதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.