தமிழகத்தில் 22 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழகத்தில் 22 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

மீன்வளத்துறை இயக்குனர், மீன்வளர்ச்சி நிறுவன மேலாண் இயக்குனராக விபி.தண்டபாணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நகரமைப்பு திட்ட ஆணையராக பீலா ராஜேஷையும் திருப்பூர் மாவட்ட ஆட்சியராக கே.எஸ்.பழனிச்சாமியும் திருச்சி மாவட்ட ஆட்சியராக கே.ராஜாமணியும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக சந்தீப் நந்தூரியும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக என்.வெங்கடேஷ், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக எஸ்.சுரேஷ்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்
கூடுதல் தலைமை செயலர் அந்தஸ்தில் நில நிர்வாக ஆணையராக மோகன் பியாரே நியமிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை செயலராக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பி.டபிள்யூ.சி.டேவிதார் நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை துணை செயலராக வி.ஜெயச்சந்திர பானு ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டுறவு சங்கங்கள் கூடுதல் பதிவாளராக ஜி.கே.அருண் சுந்தர் தயாளன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதித்துறை கூடுதல் செயலராக ஆர்.அனந்தகுமாரை தமிழக அரசு நியமித்துள்ளது. நில அளவை மற்றும் தீர்வுத்துறை இயக்குனராக எம்.ரவிக்குமாரை அரசு நியமித்துள்ளது. சர்வ சிஷ்ய அபியான் திட்ட இயக்குனராக கே.நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். நிலத்துறை கூடுதல் செயலராக பூஜா குல்கர்னியை தமிழக அரசு நியமித்துள்ளது.