பிளஸ் 1ல் 'ஆல் பாஸ்' - தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

இந்த ஆண்டு, பிளஸ் 1 படிக்கும் மாணவர்களை, 'ஆல் பாஸ்' செய்ய, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலை பரிந்துரைப்படி, தமிழகத்தில், பிளஸ் 1 பாடத்துக்கு கட்டாய பொதுத் தேர்வு, அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 
தேர்வு நேரம், மதிப்பெண் முறையிலும், மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு, பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு, 'ஆல் பாஸ்' வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
'இந்த ஆண்டு, மார்ச்சில் தேர்வு எழுதிய, பிளஸ் 1 மாணவர்களில், யாராவது தேர்ச்சி பெறாவிட்டால், அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, துணைத் தேர்வு மூலம் தேர்ச்சி பெற வைக்க வேண்டும்' என்றும், தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.