தனியார் பள்ளி ஒதுக்கீடு : இ - சேவை மையத்தில் மனு

சென்னை: தனியார் சுயநிதி பள்ளிகளில், இலவச கல்வி திட்டத்தின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீட்டில், மாணவர்கள் சேர்க்கைக்கு, இ - சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்.

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில், நுழைவு நிலை வகுப்பில், 25 சதவீத இட ஒதுக்கீடு பெறும் திட்டம் அமலில் உள்ளது. அதற்காக, பொதுமக்கள், இ - சேவை மையங்களில், விண்ணப்பிக்கலாம்.
இதற்கு, 'குழந்தையின் புகைப்படம், பிறப்புச்சான்று, அங்கன்வாடி பதிவேடு நகல், பெற்றோர் அல்லது பாதுகாவலர் வழங்கிய உறுதி மொழி கடிதத்தை கொண்டு வரவேண்டும். இருப்பிடச் சான்று, வருமான சான்று, ஜாதிச்சான்று ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கொண்டு வரவேண்டும். மே, 18 வரை, விண்ணப்பிக்கலாம்' என, அரசு தெரிவித்துள்ளது.