தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

தமிழகம் முழுவதும் இன்று 2வது கட்டமாக போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியது. சொட்டு மருந்து முதல் தவணை கடந்த 2ம் தேதி அன்று கொடுக்கப்பட்டது. 2வது தவணையாக இன்று
சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது.

தமிழகத்தில் 43,051 சொட்டு மருந்து மையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் பிரத்தியேகமாக நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.